பக்கம்:புகழ்மாலை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

51


சோணாடு ஈந்த செந்தமிழ்ச் செல்வம்


நெல்விளையும் தஞ்சைமா வட்டந் தந்த,
    நீல நிறச் சிற்பத்தை; வையத் தேடும்
செல்வத்தைத், தென்பகுதி சமுதா யத்தைச்
    சீர் திருத்தி வந்திட்ட நமது பன்னிச்
செல்வத்தைப் போற்சிறந்த மேதை;இந்திச்
செகந்தன்னில் தோன்றுவது அரிது! இந்த
நல்லறிஞன்,நற்குணத்தோன்,குறைபா டின்றி
நாடாளத் தகுதியுளோன் இப்போ தில்லை!


பலவகையில் தமிழர்க்கு நன்மை செய்த
    பண்பாளன்! முன்னாள், தென் னிந்தி யாவின்
நலஉரிமைச் சங்கத்தில் பங்கு ஏற்று
    நல்லதொரு தளபதியாய் விளங்கி வந்தோன்!
இலையாகக் கொழுந்தாகப் பெரியா ரின்முன்,
    இந்நாட்டில் பலமனிதர் இருந்த போது,
மலராகப், பெரியாரே போற்று கின்ற
மலையாக,இருந்தவர் நம் பன்னீர்ச் செல்வம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/53&oldid=1491451" இலிருந்து மீள்விக்கப்பட்டது