பக்கம்:புகழ்மாலை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

53


மணித்தமிழ் வளர்த்த மருதப்பர்


ஐயர்கள் ஏமாற்றும் தேவர்-அவர்
      ஆரெனில், முப்பத்து முக்கோடித் தேவர்.
மெய்யாய் இருந்திட்ட தேவர் இவர்
      வெல்லுங் கவிச்சபை கூட்டிய தேவர்.
அரிவாளை ஒங்காத தேவர். அள்ளி
      அள்ளிக் கொடுத்திட்ட மருதப்ப தேவர்
விரிந்த உளங்கொண்ட தேவர்-படை
      வீரர் பரம்பரை யில்வந்த தேவர்.

அரசர் பதவிக்கு உரியர்-அறி
       வாளருடன் நேரம் போக்கும் பிரியர்.
மருதப்பர் காட்சிக்கு இனியர்-இவை
      மட்டுமன்று, இவர் மிகவும் எளியர்
மூச்செனும் தாய்மொழி காத்தோன்-பல
      மொழிதனையும் கற்று அறிவினில் மூத்தோன்.
பேச்சில் கனிச்சுவை சேர்த்தோன்-மக்கள்
     பேதத்கதைவா திட்டுப்பெரும்புகழ் சேர்த்தோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/55&oldid=1491447" இலிருந்து மீள்விக்கப்பட்டது