பக்கம்:புகழ்மாலை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

புகழ் மாலை


சோலைகள் ஏற்படச் செய்தோன்-வீணர்
       சோம்பேறிகள், நாட்டின் நோய்என வைதோன்.
நூலறிவை ஓங்கச் செய்தோன்-நன்
      நூலுக்கு ஒர் உரை எழுதிடச் செய்தோன்.
கண் போன்ற தமிழை வளர்த்தோன் - பால்
      காவடிச் சிந்துவின் காரண கர்த்தர்
அண்ணமலை ரெட்டியார்க்கு-ஆடை
      ஆபரணம் மிக அதிகம் அளித்தோன்.

ஊற்றுமலை சீதக் காதி-இவர்
       உயர்ந்த அறிஞர் பெருந்தர்க்க வாதி.
போற்றும் படிவாழ்ந்த சோதி-தமிழ்ப்
       புலவரிடம் தினம் பேசும் அந்தாதி.
வயிற்றைத் தடவிடும் தொல்லை-இவர்
      வாழ்ந்திட்ட காலத்துப் புலவர்க்கு இல்லை.
மயக்கும் அரசியல் சொல்லை-நம்
      மந்திரிபோல் இவர்சொன்னதே இல்லை!

குறவன் மலையை நினைப்பான்-நெல்
       கொடுக்கும் நிலந்தனை உழவன் நினைப்பான்
மறுவற்ற தமிழை இதுபோல்-இந்த
      மருதப்பரும் தினம் நினைப்பார்-நினைத்தார்!
தலைப்பாகை இவருக்குப் பிடிக்கும்-சில
      சமயத்தில் இவர்வாய்க் கவிதைகள் வடிக்கும்.
மலைவளம் இவருக்குப் பிடிக்கும்-செத்த
      வடமொழி உயர்வெனில் இவர் ரத்தம் துடிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/56&oldid=1491272" இலிருந்து மீள்விக்கப்பட்டது