54
புகழ் மாலை
சோலைகள் ஏற்படச் செய்தோன்-வீணர்
சோம்பேறிகள், நாட்டின் நோய்என வைதோன்.
நூலறிவை ஓங்கச் செய்தோன்-நன்
நூலுக்கு ஒர் உரை எழுதிடச் செய்தோன்.
கண் போன்ற தமிழை வளர்த்தோன் - பால்
காவடிச் சிந்துவின் காரண கர்த்தர்
அண்ணமலை ரெட்டியார்க்கு-ஆடை
ஆபரணம் மிக அதிகம் அளித்தோன்.
ஊற்றுமலை சீதக் காதி-இவர்
உயர்ந்த அறிஞர் பெருந்தர்க்க வாதி.
போற்றும் படிவாழ்ந்த சோதி-தமிழ்ப்
புலவரிடம் தினம் பேசும் அந்தாதி.
வயிற்றைத் தடவிடும் தொல்லை-இவர்
வாழ்ந்திட்ட காலத்துப் புலவர்க்கு இல்லை.
மயக்கும் அரசியல் சொல்லை-நம்
மந்திரிபோல் இவர்சொன்னதே இல்லை!
குறவன் மலையை நினைப்பான்-நெல்
கொடுக்கும் நிலந்தனை உழவன் நினைப்பான்
மறுவற்ற தமிழை இதுபோல்-இந்த
மருதப்பரும் தினம் நினைப்பார்-நினைத்தார்!
தலைப்பாகை இவருக்குப் பிடிக்கும்-சில
சமயத்தில் இவர்வாய்க் கவிதைகள் வடிக்கும்.
மலைவளம் இவருக்குப் பிடிக்கும்-செத்த
வடமொழி உயர்வெனில் இவர் ரத்தம் துடிக்கும்.