பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

105


“யாருக்குச் சித்தப்பிரமை புலவர்களே? எனக்கா? இல்லை! இல்லை! நினைவோடுதான் கூறினேன். இதோ கூறியதை நிரூபித்தும் காட்டிவிடுகிறேன். பாருங்களேன்.” இப்படிக் கூறிக் தொண்டே வழியை விலக்கிச் சரேலென்று சிதையை எரித்துக் கொண்டிருந்த தீமூட்டத்திற்குள் பாய்ந்துவிட்டாள் பெருங்கோப் பெண்டு. யாருக்கும் அவள் பாய்ந்த வேகத்தில் தடுக்கவே தோன்றவில்லை. பேயறைந்தவர்கள் போலத் திகைத்து நின்றார்கள் அத்தனைபேரும்.அந்தக் கற்பின்செல்வியும் தனக்குக் கிடைத்த பெருமையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. நீரும் நெருப்பும் ஒன்றுதான் என்று குரல் கொடுப்பது போலிருந்தது சடசடவென்று தீ எரியும் ஒலி.

பெருங்கோப்பெண்டின் கற்பை என்னென்று புகழ்வது!

பல்சான் ஹீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிபெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல எமக்கெம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே! (புறநானூறு- 246)

கொடுங்காய் = வெள்ளரிக்காய், போழ்தல் = அரிதல், காழ் போல் நல்விளர் =நறுநெய் = விதைபோல உறைந்த வெள்ளிய நெய், அடை = இலை, கைப்பிழி பிண்டம் = நீரில் ஊறிய பழஞ்சாறு,