பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

புறநானூற்றுச் சிறு கதைகள்


கண்களின் ஒரங்களில் ஈரம் கசிந்திருந்தது. அவர்கள் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்ளவில்லை.

அவர்கள் வானப் பரப்பில் நீந்திவரும் நிலாவையும் அதன் கீழே எழில் மிகுந்து தோன்றும் மண்ணுலகத்து மலைச்சிகரங் களையும் இலட்சியமின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இரவு நேரம், மனித சஞ்சாரமில்லாத கானகம். துணையாக வந்திருந்த பெரியவரும் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தார். பாவம், இந்த அப்பாவிப் பெண்கள்மட்டும் ஏன் இப்படி உறக்கம் வராமல் விழித்துக் கிடக்கின்றார்கள்? வானத்துச் சந்திரனிலும் வையகத்து மலைச் சிகரங்களிலும் இவர்களுடைய அழகிய விழிகள் எவற்றைத் தேடுகின்றன? முகங்களிலே சோகமும் விழிகளிலே கண்ணிர்த் தடமுமாக இவர்கள் நடிக்கும் சோக நாடகம் என்னவாக இருக்கும்? ஒன்றும் விளங்காத புதிராக அல்லவா இருக்கின்றது?

அரசகுமாரிகளைப் போன்ற கம்பீரமான அழகுடைய இவர்கள் இரவு நேரத்தில் இந்தக் காட்டில் நடுக்கும் குளிரையும் பொறுத்துக்கொண்டு ஒரு குடிசை வாசலில் உறக்கமின்றி வீற்றிருக்க வேண்டிய அவசியம்?

நல்ல வேளை நம்முடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் சந்தர்ப்பம் இதோ நெருங்கிவிட்டது. நீண்டநேர மெளனத்துக்குப்பிறகு அந்தப் பெண்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ உரையாடத் தொடங்குகின்றனர். அதைக் கூர்ந்து கவனிப்போம்.

“சங்கவை!”

“என்ன அக்கா?”

“கபிலர் நன்றாக உறங்கிவிட்டாற்போல் இருக்கிறதடி..!”

“பாவம்! வயதான காலத்தில் நம்மைக் காப்பதற்காக இப்படி அலைகிறார். நடந்து வந்த களைப்பு. நன்றாகத் துரங்கி விட்டார் அக்கா!”