பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

145


கொத்தாகப் பூத்தது! ஆனால் யாருக்காக? அதுதான் தெரியவில்லை!

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேல்சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே (புறநானூறு- 242)

இளையோர் = ஏவலர்கள், வளையோர் = பெண்கள், பாணன் = பாடுபவன், பாடினி = பாடுபவள் மாய்ந்த = இறந்த பூத்தியோ = பூக்கிறாயோ.


33. சிவந்த விழிகள்

தகடூர் அரண்மனையில் அன்று ஆரவாரம் நிறைந்திருந்தது. திரும்பிய இடமெல்லாம் மகிழ்ச்சியின் அறிகுறிகள் தென்பட்டன. அரண்மனையைச் சேர்ந்த பகுதிகளில் சிறப்பான அலங்காரங்கள் செய்திருந்தார்கள். அங்கங்கே மங்கள வாத்தியங்கள் இன்னிசை முழக்கின.இவ்வளவிலும் கலந்துகொள்ள அரசன் அதியமானோ, அரண்மனையைச் சேர்ந்த ஏனைப் பெரியவர்களோ, அந்தச் சந்தர்ப்பத்தில் தலைநகரத்திலேயே இல்லை.

எல்லோரும் போருக்குச் சென்றிருந்தார்கள். திருக் கோவலூர் அரசன் மலையமான் திருமுடிக்காரியோடு அதியமான் போர் தொடுத்திருந்தான்.போர் என்றால் சாதாரண போர் இல்லை அது அதியமானுடைய ஆற்றலுக்கே ஒரு சோதனையாக அமைந்திருந்த போர் அது!

இந்தப் பயங்கரமான நிலையில், அவன் தலைநகரிலிருந்து வெகுதொலைவில் சென்று போர்க்களத்திலே தங்கியிருக்கும்