பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

புறநானூற்றுச் சிறு கதைகள்


போது, இங்கே தகடுரில் அவன் அரண்மணை கோலாகலத்தில் மூழ்கியிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா?

ஆனால் அவனுடைய போர்ப் புறப்பாட்டுக்குப் பின் அரண்மனையிலே நிகழ்ந்த ஒரு மங்கல நிகழ்ச்சியைத் தெரிந்து கொண்டால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. நடந்திருந்த நிகழ்ச்சி ஆரவாரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஏற்ற மங்கலம் நிறைந்த ஒன்றுதான்.

போருக்காக அதியமான் புறப்பட்டுச் சென்றபோது அவன் மனைவி மகப்பேற்றுக்குரியவளாக இருந்தாள். அவளுக்கு அப்போது நிறைமாதம். அவன்போருக்குச் சென்ற சில நாட்களிலேயே அவள் பொற்சிலை என்று கூறத்தக்க ஆண்மகவு ஒன்றைப் பெற்றாள். அதியனுக்குப் புதல்வன் பிறந்த அந்த மகிழ்ச்சியில்தான் தகடுர் அரண்மனை கண்ணுக்கினிய காட்சிகளாலும், செவிக்கினிய இசையினாலும் நிறைந்திருந்தது. மகன் பிறந்த நல்ல செய்தியைச் சென்றுரைப்பதற்காக உடனே போர்க் களத்திலிருந்த அதியமானுக்குத்துதன் அனுப்பப்பட்டிருந்தான்.

மகன் பிறந்தநல்லவேளையோ என்னவோ, அதியமானுக்குப் போரிலும் எதிர்பார்த்ததைவிட விரைவில் வெற்றிகிட்டிவிட்டது. தன்னால் வெல்லவே முடியாது என்று மலைத்துப் போயிருந்த திருமுடிக்காரியை மிக எளிதில் வென்றுவிட்டான் அவன்.வெற்றி மகிழ்ச்சியோடுபோர்க்களத்திலிருந்து தலைநகருக்குப்புறப்படும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதுதான், புதல்வன் பிறந்திருக்கிறான்’ என்ற களிப்புக்குரிய மங்கலச் செய்தியோடு தகடுரிலிருந்து தூதன் வந்து சேர்ந்தான்.

செய்தியறிந்ததும் உடனே சென்று புதல்வனைக் காண வேண்டும் என்ற ஆசையால் போர்க்கோலத்தைக்கூட மாற்றிக் கொள்ளாமல் அப்படியே புறப்பட்டுவிட்டான் அவன். மலையமான்மேல் படையெடுத்து வந்த வேகத்தைவிடப் புதல்வனைக் காண்பதற்காக அதியமான் சென்ற இந்த வேகம் அதிகமாக இருந்தது.