பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

167


“இல்லை! நீ வெறும் வேடனில்லை. வேடன் என்பதிலும் பெரிய தகுதி ஒன்று உனக்குள் அடங்கிக் கிடக்கிறது. நீ அதை என்னிடம் மறைக்கிறாய்...”

“புலவரே! அன்பும் ஆதரவும் நல்குவதற்குத் தகுதியா முக்கியம்.நல்ல மனம் ஒன்று போதாதா? அது என்னிடம் உண்டு.”

“பரவாயில்லை சொல்லிவிடு. நீ யார்?”

“புலவரே என்னை வல்வில் ஓரி’ என்பார்கள். இந்த மலைக்குத் தலைவன். வணக்கம். நான் வருகிறேன்” சொல்லிக் கொண்டே நகர்ந்தான். அவன். வியப்போடு நடந்து செல்லும் அவன் உருவத்தைப் பார்த்தார் அவர் ‘அவனா எவனோ ஒரு வேடன்? மனிதப் பண்பின் வீரசிகர மல்லவா அவன்?’ புலவர் தமக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

வேட்டுவரில்லை நின்னொப் போர்என
வேட்டது மொழியவும் விடா அன் வேட்டத்திற்
றான்.உயிர் செகுத்த மான்நிணப்புழுக்கோடு
ஆனுருக் கன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை
ஓங்கிருங் கொல்லிப் பொருநன்
ஓம்பர் ஈகை விறல்வெய்யோனே! (புறநானூறு -152)

வேட்டது = விரும்பியது, செகுத்த- போக்கிய, புழுக்கு = வாட்டல், வேரி = தேன். தாவில் = குற்றமற்ற, மணிக்குவை = மணியாரம், விரைஇ= கலந்து, பொருநன் = வல்விலோரி.