பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

புறநானூற்றுச் சிறு கதைகள்


அடிப்படை ஒன்றேதான்” என்ற சொற்கள் பாண்டியனிடமிருந்து வெளிவந்தன.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஒரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே (புறநானூறு -189)

தெண்கடல் = தெளிந்த கடல், வளாகம் = உலகம், பொதுமை = பிறருக்கும் உரிமை, ஒருமையோன் = ஏகச்சக்ராதிபதி, துஞ்சான் = - துங்காமல், கடுமா = வேகமாக ஒடும் மிருகங்கள், கல்லா ஒருவன் படிப்பறிவற்ற வேடன், துய்ப்போம் = அனுபவிப்போம், தப்புந தப்பக்கூடியவை.


7. நட்பின் கதை

சோழநாட்டுக் கோநகராகிய உறையூர், அழகும் இயற்கை வளமும் மிக்க காவிரியாற்றின் கரை, மேடும் பள்ளமுமாகத் தென்படுகிற வெண் மணற்பரப்பின் நடுவே பலர் கூடி நின்று கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுபேர் முகங்களிலும் சோகம் குடி கொண்டிருந்தது. அது எத்தகைய சோகம் தெரியுமா? பிரிய முடியாததைப் பிரியும்போது, இழக்க முடியாததை இழக்கும் போது ஏற்படுகின்ற சோகம்.

கூட்டத்தின் நடுவே அரசர்க்கரசனான கோப்பெருஞ் சோழன், எளிய உடையுடுத்து, வடக்கு நோக்கி வீற்றிருந்தான். அவனைச் சுற்றிச் சதுரமாக ஒருசிறிது பள்ளம் உண்டாக்கப் பட்டிருந்தது. மணல் மேல் தருப்பைப் புற்கள் பரப்பப்