பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

39


ஒன்றாகிய ஈருயிர்களும் உலகுக்கு ஒர் அரிய உண்மையைக் கொடுத்தன.

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன்நாட்டுத்
தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி
இசை மரபாக நட்புக் கந்தாக
இணையதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றோ!

(புறநானூறு - 217)

மருட்கை = வியப்பு, இசை=புகழ், கந்து பற்றுக்கோடு, சான்றோன் = பிசிராந்தையார், கோன் = கோப்பெருஞ்சோழன், பழுதின்றி = பொய்யாகாமல், மரபு = வழக்கம், வியப்பிறந்தன்று = ஆச்சரியம் அளவற்றுப் பெருகுகிறது.


8. வீரக் குடும்பம்

“அதோ அந்தப் பெண்ணைப் பார்த்தீர்களா?” ஒக்கூர் மாசாத்தியார் தம்மிடமிருந்த மற்றோர் புலவருக்குச் சுட்டிக் காட்டினார்.

“அந்தக் குடிசை வாயிலில் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாளே, அந்தப் பெண்ணைத்தானே சொல்லுகிறீர்கள்?”

“ஆமாம் அவளேதான்!”

“அவளுக்கு என்ன?”