பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

59


“ஆமாம் ஐயா! அப்படி ஒர் இளைஞன் க்ருவூரிலிருந்து சற்றைக்கு முன் இங்கே வந்தான். நாங்கள் மன்னரிடம் போய்க் கேட்டோம். அவன் கருவூரிலுள்ள நலங்கிள்ளியிடமிருந்து வந்திருந்தால் அவனை உடனே சிறையில் அடையுங்கள். ஒற்றனாக இருந்தாலும் இரப்பான் என்று அரசர் உத்தரவு இட்டார். உத்தரவுப்படியே சிறையில் அடைத்திருக்கிறோம்” என்று கோட்டைக் காலவர்களிருவரும் கோவூர் கிழாரிடம் கூறினர்.

உடனே கோவூர்கிழார் நெடுங்கிள்ளியைக் கண்டு இளந்தத்தனைப் பற்றிய உண்மையைக் கூறினார்: “அரசே! சுதந்திரமாகப் பறந்து திரியக்கூடிய பறவையைப் போன்றவன் பாவலன். அவனை வாழச் செய்வது, அரசர்கள் அன்புற்று அளிக்கும் பரிசில். தீமையில்லாமல் பழுமரம் நாடிச் செல்லும் பறவையைப் போன்ற ஓர் அப்பாவிப் பாவலனைச் சந்தேகமுற்றுச் சிறையில் வைக்கலாமா?”

“எந்தப் பாவலனை அப்படிச் செய்திருக்கிறேன் நான்”

“நேற்றுக் கருவூரிலிருந்து வந்த இளந்தத்தனென்னும் புலவனை?”

“மன்னியுங்கள் ஒற்றனென்று தவறாகக் கருதிச் சிறையில் அடைத்துவிட்டேன். இதோ இப்போதே விடுதலை செய்து விடுகிறேன்.”

“நல்லது! பாவலன் ஒரு சுதந்திரமான பறவை. அவனைச் சிறை செய்வதுபோன்ற கொடுமை வேறில்லை”

வள்ளியோர்ப்படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஒம்பாதுண்டு கூம்பாது விசி வரிசைக்கு
வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே, திறப்பட