72
புறநானூற்றுச் சிறு கதைகள்
நூம்மோரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி
உவகை செய்யும் இவ்விகலே.” (புறநானூறு - 45)
வெண்தோடு = வெள்ளிய இதழ்கள், மலைந்தோன் = அணிந்தவன், சினை = கிளை, தெரியல் = மாலை, கண்ணி = மாலை, ஆர் = ஆத்தி, பொருவோன் = போர் செய்கிறவன், வேறல் = வெற்றி பெறுதல், செய்தி = செயல், இகல் = பகைமை, மெய்ம்மலி உவகை = உடம்பு பூரிக்கும்படியான மகிழ்ச்சி)
இன்று உலக நாடுகளின் சபை தனது பாதுகாப்புக் கவுன்சிலால் செய்யத் திணறும் காரியத்தை அன்றே தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப்புலவர் செய்து முடித்திருக்கிறார்: ஆச்சரியமில்லையா, இது?
போர் முடிந்துவிட்டது. ஒலித்து ஒய்ந்த சங்குபோல் போர்க்களம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. இருபுறத்துப் படைகளிலும் இறந்தவர்போக இருந்தவர் நாடு திரும்பினர். பல நாட்கள் போர்க்களத்தில் ஒய்வு ஒழிவின்றிப் போரிட்ட களைப்பு பாவம். அவர்கள் என்ன செய்வார்கள்? வீடு, வாசல், மனைவி மக்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்காதா?
வீரர்கள் வரிசை வரிசையாக வெற்றிப் பெருமிதத்தோடும் களைப்போடும் தங்கள் தலைநகரத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். உற்றார் உறவினர்கள் அவர்களை மகிழ்ச்சி யோடு எதிர்கொண்டழைக்கிறார்கள். ஒரே ஆரவாரம்; ஒரே கோலாகலம் வருவோரும் வரவேற்போருமாக மயங்கிக் கலந்து நின்ற அந்தக் கூட்டத்தின் ஒர் ஒரத்தில் வயதான கிழவி ஒருத்தியைக் காண்கிறோம்.
கொக்கின் இறகுபோல் நரைத்து வெளுத்த கூந்தல். பசிய நரம்புகள் புடைத்துத் தசை சுருக்கமடைந்து எலும்புகள் தெரியும்