பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

87

விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டு அளைமல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளமி லாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகி யரோ
கடுங்கண் வேழம் இடம்பட வீழ்ந்தென
அன்றவண் உண்ணா தாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்பு வேட்டெழுந்
திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவாகி யரோ! (புறநானூறு - 190)

பதம் = பருவம், சீறிடம்=சிறிய இடம், வல்சி = இரை, அளை = பொந்து, மல்க=நிறைய வலிஇறுக்கம்= சேர்த்து வைக்கும், கேண்மை =நட்பு, வேழம் = யானை, விடரகம் = கணவாய், களிற்றொருத்தல் = ஆண் யானை, மெலிவில் = சிறுமையில்லாத, உரனுடையாளர் = வலிமையாளர், வைகல்= நாட்கள். -


19. மனம்தான் காரணம்

“பிசிராந்தையாரே! உமக்கு என்ன ஐயா வயது இப்போது”

“ஏன்? எவ்வளவு இருக்கலாம் என்று நீங்கள்தான் ஒரு மதிப்புப் போட்டுச் சொல்லுங்களேன் பார்ப்போம்” தம்மிடம் கேள்வி கேட்ட புலவர்களைப் பார்த்து எதிர்க் கேள்வி போட்டார் பிசிராந்தையார்.

“உம்மைப் பார்த்தால் முப்பது அல்லது முப்பத்தைந்து வயதுக்குமேல் மதிக்க முடியாது!”

“நிஜம்தானா?”