இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
-20-
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டு மக்களுக்கு இன்னொரு கடமை உண்டு. அதாவது அவர்கள் பொருள்களைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். தன்னலமின்றி எதையும் நாட்டிற்காக விட்டுக்கொடுக்க வேண்டும். இரண்டாவது உலகப் பெரும்போரில் ஆங்கிலேயரும் அமெரிக்கரும் உணவையும் குறைத்துக் கொண்டார்களாம்'. ஆங்கிலேயர்கள் தங்களிடம் அன்றாடத் தேவைக்குமேல் இருந்த பொருட்களை ஒருவர்பின் ஒருவர் (கியூ) வரிசையில் நின்று அரசுக்கு அளித்தார்களாம். நாமும் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
போர் தொடர்பாக எந்தவிதமான இழப்பும் இன்னலும் ஏற்படினும் கலங்காது வருந்தாது நிமிர்ந்து நிற்க வேண்டும். நாட்டின் நலனுக்காக எதை இழக்க நேரிடினும் அதைப் பெரும் பேறாகக் கருதவேண்டும்.
அயராதே ! அஞ்சாதே !
முயலு ! முன்னேறு !
வெற்றி நமதே !