பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மருத்துவ விஞ்ஞானிகள்


முதல் மகள். அதனால் அவள் மீது அவர் அதிகப்படியான அன்பை வைத்திருந்தார்:

தனது மகன் உடல் நலமாக, பாஸ்டியர் அருகே இருந்த படியே அவளைக் கவனித்து வந்தார். ஆனால், அவள் பெற்ற சிகிச்சைப் பலனின்றியே அந்தப் பெண் மரணமடைந்தாள்.

முதலில் தந்தையின் இழப்பு, இரண்டாவதாக தனது மகள் மரணம், இந்த இறப்புத் துயரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரவே, பாஸ்டியருடைய மெழுகு போன்ற உள்ளம் உருகிவிட்டது. அதனால் அவர் மனமுடைந்தார்!

தந்தையை நோய்க்குப் பலி கொடுத்துவிட்ட சோகம், தனது மகளை தொடர் நோய்களுக்குப் பறி கொடுத்த சம்பவம், இவைகளை நினைத்து நினைத்து நெஞ்சம் வெந்து கொண்டிருந்த போதுதான், அவருடைய முழு நேரக் கருத்தும்; கவனமும் மனிதனுக்கு வருகின்ற நோய்களின் தன்மைகளைப் பற்றி ஆராயும் ஒரு மன வைராக்கியத்தை வழங்கியது என்று கூறலாம்.

எனவே, லூயி பாஸ்டியர் தனது வீட்டு இறப்புகளது இழப்புக்குப் பின்பு, தனது மனத்தை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு, மறுபடியும் தனது ஆராய்ச்சி வேலைகளிலே தொடர்ந்து ஈடுபட்டார்.

இந்த நேரத்தில், லூயி பாஸ்டியரின் இரண்டாவது மகள் ஒருத்தியையும் சாவு பலி கொண்டது! அதற்கான சடங்கு களையும் அவர் செய்து முடித்தார்.

மறுபடியும் பூச்சி இன ஆராய்ச்சியை எங்கே அவர் அரை குறையாக விட்டாரோ, அதே இடத்திலிருந்து மீண்டும் தனது சோதனைகளைச் செய்யத் துவங்கினார் பாஸ்டியர்!

சாவு மேல் சாவு, மரணம் மேல் மரணம் என்று தொடர் இழப்புக்கள் ஏற்பட்டு வந்த லூயி பாஸ்டியர் வீட்டில், நான்காவதாக ஒரு மரணமும் ஏற்பட்டுவிட்டது.