பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

133



தனது மகனுக்குரிய கல்விச் செலவுகள் மிகவும் குறைந்து விட்டதைக் கண்ட லூயி பெற்றோர்கள், தங்களது கல்வி சம்பளத்துக்கான உழைப்பு குறைந்தது கண்டு மகிழ்ந்தார்.

லூயி பாஸ்டியர் தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு பாடபோதனை செய்வதோடு நின்றுவிட வில்லை. அதே நேரத்தில் கல்வி கொடுத்தாலும் நிறைவின்றிக் குறைவுராது என்பதற்கு ஏற்றவாறு அவரது பாடங்களையும் ஐயந்திரிபெறத் தெரிந்து தெளிவுப் பெற்றுக் கொண்டார்.

அந்த ஆண்டின் இறுதித் தேர்வு வந்தது. லூயி பெளதிகப் பாடத்தில் முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். அதற்காக பள்ளி நிருவாகம் அவருக்குரிய பரிசு ஒன்றையும் வழங்கியது.

தாம் அறிவியல் துறையில் படித்த சோதனைகளை எல்லாம் தாமே செய்தார். அதில் சில உண்மைகளைக் கண்டறிவதில் அவருக்கு ஆர்வம் அதிகமாக வளர்ந்தது. வழக்கம்போல அறிவியல் பாடங்களை மிக மெதுவாகவே அறிந்தார்; ஆனால், அதைத் தெளிவாகவே புரிந்து கொண்டார்.

அறிவியல் பாடங்களில் பட்டப் படிப்பிற்காகப் படித்த போதும் கூட, லூயி வழக்கமான தனது சுபாவங்களுக்கேற்ப அவற்றை மெதுவாகவே அறிந்து வந்தார்; ஆனால், நுனிப்புல் மேயும் மேடக அல்லாமல் தெளிவாகவே பாடங்களைத் தெரிந்து வந்தார். இதனால் லூயி பாஸ்டியருடைய முன்னேற்றம் வேண்டுமானால் சிறிது தாமதப்படலாமே தவிர, அவரைப் போல் ஒவ்வொரு நுணுக்கங்களையும் ஆழ்ந்து தெரிந்தவர்கள் அந்த மாணவர்களிலே யாருமில்லை என்று பள்ளிப் பேராசிரியர்கள் எண்ணி வியந்தார்கள். அவர்களுள் குறிப்பிடத் தக்கப் பேராசிரியர்கள் டுமாஸ் என்பவர் ஒருவர்; மற்றொருவர் பாலார்டு ஆவார்.

லூயி பாஸ்டியர் தனது கல்விப் பயிற்சியில், இராசயனத்தையும். பெளதிகத்தையும் இரு கண்களைப் போல போற்றிப் படித்துப் பயிற்சி பெற்று வந்தார். குறிபபிட்ட வடிவத்தை அடைகின்ற படிகங்கள் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்தன.