பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

139


கடிதம் மூலமாகவும் தெரிவித்தார். அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? இருபத்தாறு! திருமணம் நடைபெறவில்லை.

ஸ்டிராஸ்பர்க் என்ற நகரம் லூயிக்குப் புதிய நகர். உணவுக்கு அவர் கஷ்டப்பட்டார். ஆர்பாய் நகரிலே இருந்து அவர் பணிபுரியும் பல்கலைக் கழக நகருக்கு தினந்தோறும் வந்து போகலாம் என்றாலோ, அது மிகத் தொலைவாக இருந்தது. நேரடிப் போக்குவரத்தும் சரியாக இல்லை.

தந்தையாருக்கு லூயி கடிதம் எழுதினார். உணவுத் தட்டுப்பாடு உண்டாவதைக் குறிப்பிட்டார். தனது தங்கையை சமையல் செய்துபோட அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார் தந்தையும் அதற்கு சம்மதித்து உடனே அழைத்துக் கொண்டு போகுமாறு கடிதம் எழுதினார். ஆனால், லூயி தனது தங்கையை சமையலுக்காக அழைத்துவரத் தயங்கினார். பிறகு, நிறுத்திவிட்டார்.

ஸ்டிராஸ்பர்க் நகர பல்கலைக் கழகத்தின் தலைவராக லாரண்ட் என்பவர் இருந்தார். அவரை லூயி பாஸ்டியர் நேர் காணச் சென்றார். வயதில் இளையவராகவும் இளம் விஞ்ஞானி யாகவும், இளம் பேராசிரியராகவும் வந்துள்ள லூயியை, பல்கழகத் தலைவரான லாரண்ட் மகிழ்ச்சியோடு வரவேற்றார்!

அவரது நிலையை நன்கு விசாரித்து தெரிந்த பின்பு, பல்கலைக் கழகத் தலைவருக்கு லூயியை மிகவும் பிடித்து விட்டது. இருவரும் நண்பர்களானார்கள்.

தலைவர் லாரண்ட் அடிக்கடி லூயி பாஸ்டியரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்வார்; உரையாடுவார்; விருந்து கொடுப்பார். லூயியின் அறிவியல் ஆய்வுகளைக் கேட்டு வியப்பார்; தொடர்ந்து ஆய்வு செய்திட ஊக்கங்களை வழங்குவார்.

இத்தகைய தொடர்புகளால், லாரண்ட் குடும்பத்திற்கும் அவருக்கும் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. அதனால் தனது தங்கையை ஆர்பாய் நகரிலே இருந்து பாரிஸ் நகருக்கு சயைமலுக்காக அழைத்துவரத் தயங்கினார்.