பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

மருத்துவ விஞ்ஞானிகள்



இந்த நிலையில் லூயி மாணவர்களுள் ஒருவர், தனது தந்தையின் ஆலோசனைக்கு ஏற்ப, தனது தந்தையின் தொழிற்சாலைக்கு லூயியை வருமாறு அழைத்தார். அதற்கு அவரும் இணங்கினார்.

இருவரும் குறிப்பிட்ட தொழிற்சாலைக்குச் சென்றபோது, மாணவனின் தந்தை எழுந்தோடி வந்து இரு கைகூப்பி, குலுக்கி மகிழ்ச்சியோடு வரவேற்றார்; அதே நேரத்தில் தொழிற்சாலைக்கு வருகை தந்த விருந்தினரை அங்கு பணி புரிவோரும் கூடி வரவேற்றார்கள்.

தன்னை அழைத்து வருமாறு ஏன் கூறினீர்கள்? என்று லூயி தொழிற்சாலை உரிமையாளரைக் கேட்டார்.

‘ஐயா, பீர் தயாரிப்பது எனது தொழில். என்னை நம்பி ஆயிரம் பேர்களுக்கு மேல் பணியாற்றுகிறார்கள். சில காலமாக எனது இந்த தொழிலில் பலத்த நாட்டம் ஏற்பட்டு வருகிறது என்றார்!

அதற்கு லூயி என்ன காரணம்? என்று விளக்கம் கேட்டார்.

‘பீர் தயாரிக்கும்போது கலவை நொதித்து பீராக மாறுவதில்லை. கலவை அழுகி வீணாகி விடுகின்றது. இதுதான் எனக்கு நட்டமேற்படக் காரணம்! ஆனால், என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை ஐயா!

நீங்கள் ஒரு சிறந்த விஞ்ஞானி என்று நாடும் - நகரமும் புகழ்ந்து பாராட்டுகின்றது. விஞ்ஞானியாக நீங்கள் விளங்கு வதற்கு, ஒரு வழி கண்டுபிடிப்பீர்கள் என்பதற்காக எனது மகனிடம் தங்களை அழைத்து வருமாறு கூறினேன்.

எனக்கு நீங்கள்தான் ஏதாவது வழி காட்ட வேண்டும் என்று அந்தத் தொழிலுரிமையாளர் பணிவோடும், பரிவோடும் கேட்டுக் கொண்டார் - லூயியை!

சிந்தனை செய்தவாறே லூயி சிறிது நேரம் அமர்ந்திருந்தார். உடனே அந்த தொழிலதிபருடன் சென்று நன்றாக இருந்த கலவை பீரில் கொஞ்சமும், கெட்டுப்போன கலவை பீரில் கொஞ்சமும் பாட்டிலில் எடுத்துக் கொண்டார்.