பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

155



இந்த நேரத்தில் ஃபிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் போர் மூண்டது. பாஸ்டியரின் ஒரே மகன் தாய் நாட்டின் மானத்தைக் காக்க போர் முனைக்குச் சென்றான்.

லூயி பாஸ்டியர், பாரிஸ் நகரைவிட்டு தனது சொந்த ஊரான ஆர்பாய் சென்று, அங்கேயே தங்கினார்! போரில் நாளுக்கு நாள் ஜெர்மனியே வெற்றிபெற்று வந்ததால், லூயிக்கு மனக் கவலை அதிகரித்தது.

ஜெர்மனியின் வெற்றி வெறுப்பும் - பிரான்ஸ் தோல்வி கவலை யும் லூயிக்கு தந்ததால், முன்பு ஒரு முறை லூயியின் விஞ்ஞானக் கண்டுபிடிப்பைப் பாராட்டி ஜெர்மன் நாடு வழங்கியிருந்த டாக்டர் பட்டத்தை, அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்.

‘இந்தப் பட்டம் மனித நேயமற்ற பட்டம். பார்த்தாலே எனக்கு வெறுப்பு தோன்றுகின்றது என்று கடிதம் எழுதி - அந்தப் பட்டச் சான்றிதழுடன் இணைத்து, முகத்திலடித்தார்போல அதை திருப்பி அனுப்பிவிட்டார்.

அதே நேரத்தில், இத்தாலி நாடு லூயி பாஸ்டியருக்கு ஓர் அழைப்பைச் செய்தியாக அனுப்பியது. அந்த செய்தி இது:

லூயி அவர்களே! உங்களுக்கு எல்லா ஆய்வு வசதிகளும் கொண்ட ஒர் விஞ்ஞானக் கூடத்தை வழங்குகிறோம். ஒரு பட்டுப் பூச்சிப் பண்ணை நிறுவனத்தை கொடுக்கிறோம். நீங்கள் விரும்பினால் இத்தாலிக்கு வரலாம்’ என்பதே அந்த நாட்டு அரசு அனுப்பிய செய்தியாகும்.

இத்தாலியர் பல்கலைக் கழகமும் லூயி பாஸ்டியருக்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தது. என்ன தெரியுமா அது?

‘உங்களை எங்கள் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக நியமிக்கின்றோம், என்ன சம்பளம் எதிர்பார்க்கின்றீர்களோ - அதைக் கொடுக்கவும் தயாராக உள்ளோம். பதவியை நீங்கள் வந்து ஏற்றுக் கொண்டால் போதும்.’ என்பதுதான் அந்தச் செய்தி.

லூயி பாஸ்டியர் சிறந்த தேச பக்தர், ஃபிரான்ஸ் நாட்டுப் போர் முனைக்குத் தனது ஒரே மகனைப் போராட அனுப்பியவர்;