பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

43


டாக்டர்களே நோயைக் கண்டு பயப்படக் கூடியவர்களாகவும் இருந்தன.

ஏனென்றால், அக்கால வசதி வாய்ப்புகள் வேறு, இக்கால வசதி வாய்ப்புகள் வேறுவேறு வகைகளாக இருந்தன. பல வகையான வியாதிகள் மனிதனைக் கடுமையாகத் தாக்கி, அவர்களது உயிர்களைப் பறிக்கும் எமன் தூதுவர்களாக அவை விளங்கின எனலாம்.

உயிர்களைப் பறிக்கும் இந்த நோய்கள், நோயாளிகட்கு மட்டுமா சிக்கல்கைள உருவாக்கின? டாக்டர்களையும் சிக்கலில் சிக்க வைக்கும் சிக்கல் சங்கிலிப் பொறி வளையங்களாக இருந்தன. எப்படி?

அறுவை சிகிச்சை முடிந்த பின்பு நோயாளிகளின் இரத்தம் விஷமாக, மாறி விடுகின்றது. அதனால் நோயாளி மரணமடைந்து விடுகிறான். என்ன காரணம் இந்த நஞ்சு மாற்றத்துக்கு?

டாக்டர்கள் இந்த ஆராய்ச்சி வளையமெனும் குகைக் குள்ளே போனவர்கள், லிஸ்டர் காலம் வரை அவர்கள் எவரும் திரும்பி வந்ததில்லை.

நாம் கூட விளையாட்டுக்காகச் சில நேரங்களில் கூறுவோமே, ஆப்பரேஷன் சக்சஸ், ஆனால் நோயாளிகள் அவுட் அதாவது ஆள் காலி என்று கிண்டலடிப்போம் அல்லவா? அது சாதாரண விஷயமன்று! நூற்றுக்கு நூறு வேதனை தரும் உண்மை ஆகும்!

பெரும் டாக்டர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, இந்த நோயின் காரணத்தைக் கண்டறிய முயன்றும், அவர்களால் முடியவில்லை. நோயாளிகள் இறந்ததுதான் மிச்சம்! யாருக்கும், எந்த டாக்டருக்கும் ஒன்றும் விளங்காத, புரியாத, மாயமாக, மந்திரமாக, சூன்யமாக, இறை குற்றமாக இந்த நோய்கள் இருப்பனவோ என்னவோ என்று, மருத்துவர்கள் திணறித் தவித்தார்கள்.

நோயாளியும் சாகிறான். அதே நேரத்தில் திறமையான டாக்டருக்கும் கெட்ட பெயர்; மருத்துவமனைக்கும் நோயாளிகள் புதிதாக சேர்ந்திடப் பெருத்த பயம் உண்டாகி வந்தது.