பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மருத்துவ விஞ்ஞானிகள்



மனிதனுக்குள் நடக்கும் அறுவை சிகிச்சையின் ரத்த வெளியேற்றம், ஆவியாக உறைந்து போவது, கெட்ட ஆவிகளின் கெட்டச் செயல் என்றும் மக்கள் நம்பினார்கள்.

இது கடவுள் மனிதனுக்குத் தரும் தண்டனை என்று அதை விமரிசனம் செய்தார்கள்; ஆதாம் - ஏவாள் செய்த பாவம்தான் மக்களை இவ்வாறு பலி வாங்குகின்றது என்றும் கிறிஸ்துவ மத மூட நம்பிக்கைகளும் முகாரி பாடின!

நம் நாட்டில் மருத்துவமனைப் படுக்கையிலே நோயாளியாகப் படுத்துக் குணமாகி வந்தவன் மீண்டு வீட்டுக்கு வந்தால், முழுப் பூசனியை மஞ்சள் குங்குமத்தால் விகாரமாக்கி, நோயாளியின் தலையைச் சுற்றி அதை நடு வீதியிலே போட்டு உடைக்கின்றார்கள் அல்லவா? - கண்ணேறு கழிய!

அதைப் போல, அயல் நாடுகளில் வாழும் கிறித்தவர்களிடமும் இருந்தது - சில மூடக் குணங்கள்.

இதையெல்லாம் ஏற்குமா விஞ்ஞானம்? எனவே, மேலும் மேலும் ஆராய்ந்து கொண்டே மனிதன் விஞ்ஞானியாக விளங்கினான் அதன் எதிரொலிதான் லிஸ்டர்கள் தோற்றும் ஆகும்.

பண்டையக் காலத்தில் மனிதனுக்கு எவ்வாறு நடந்தது அறுவை சிகிச்சை தெரியுமா? அவற்றைக் கேட்டால் நமது நாடி நரம்புகள் எல்லாமே நடுங்கிக் கண்ணி சிந்தும்.

மனிதன் கட்டிலில் வந்து அறுவை சிகிச்சைக்காக படுப்பான். அதற்குப் பிறகு, கையிலே கொடுவாள், ரம்பம், உளி, கிடுக்கி, கொறடா, கத்திரி, ஊசி, நரம்பு நூல், கோப்பைக் கலயம், கந்தைத் துணிகளோடு நாவிதன் வருவான்.

அறுக்க வேண்டிய உடற் பகுதிகளை டாக்டர்கள் நாவிதர்களிடம் காட்டுவார்கள். மரத்தை அறுப்பதைப் போல மேல் கீழ் இரு பாகங்களிலும் இருவர் நின்று கொண்டு, கால், கைகளாக இருந்தால் வாளால் அறுப்பார்கள்; கத்தியால் வெட்டுவார்கள்! இரம்பத்தாலும் அறுப்பார்கள்.