பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

45




நாவிதன் அறுத்து முடிந்த பிறகு, மறுபடியும் மருத்துவர்கள் வருவார்கள். சிகிச்சை செய்வார்கள்.இதுதான் அக் காலத்து ஆப்பரேஷன் எனப்படும் அறுவை சிகிச்சை!

இன்றைக்கு நாம் ஆடுகளை வெட்டும் தொட்டிக்கோ, அல்லது ஆட்டுக் கறி வெட்டும் கசாப்புக் கடைக்கோ சென்றால் சில உண்மைகளை நாம் நேரிலேயே காணலாம்! அதாவது, கசாப்புக் கடையைப் போலவே எல்லா வெட்டுக்களையும் கடைக்காரன் கத்திகள் நடத்தும்.

கசாப்புக் கடைக்கும் - ஆப்பரேஷன் செய்யும் மருத்துவ மனைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன தெரியுமா?

கசாப்புக் கடைகளில் கறி வெட்டும் முஸ்லிம் பாய் இருப்பார்; ஆப்பரேஷன் நடக்கும் இடத்தில் நாவிதர்கள் இருப்பார்கள்.

அங்கே ஆடு, மாடு, எருமை போன்ற விலங்குகள் அறுக்கப்படும்! மருத்துவ மனையில் மனிதர்கள் அறுக்கப் படுவார்கள்!

கசாப்புக் கடைகளில் ஆடு, மாடு, கோழிகள் கத்தும்; கதறும், துடிக்கும்; துள்ளும்; ரத்தம் பீறிட்டடிக்கும். திட்டுத் திட்டாக ரத்தம் தேங்கி நின்று காய்ந்து விடும்.

இதே வேலையைத்தான் மருத்துவ மனைகளில் மனிதர்களைத் துள்ளத் துடிக்க, ஐய்யோ குய்யோ என்ற வேதனைக் கதறலோடு கூப்பாடும் கூக்குரலும் போடுமளவுக்கு நாவிதர்கள்.

இக் காலத்தில் ஆப்பரேஷன் நேரத்தில் ‘குளோரபாம்’ கொடுக்கிறார்கள். அக் காலத்தில் நாவிதனிடமோ, மருத்துவர் களிடமோ அந்த ‘குளோரபாம்’ என்ற மயக்க மருந்தும் கிடையாது.

இரத்தம் கொப்புளிக்கக் கொப்புளிக்க, நோயாளிகள் எதிரிலேயே அவனது வியாதி உறுப்புக்களை நாவிதர்கள் அறுப்பார்கள்.