பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

61



படைத்து அலைக் கழித்து நிலை தடுமாறும் நிலையை உருவாக்கியது.

காமன் பள்ளி வகுப்பிலே இருந்த மேசைகள், நாற்காலிகள், பெஞ்சுகள், அனைத்திற்கும் இறக்கைகள் முளைத்து வீதிகளுக்குப் பறந்து வந்தன. அதே போல வகுப்பறையிலே இருந்த புத்தகங்கள், ஆவணங்கள் எல்லாமே வகுப்பறைக்குள் ருத்ர தாண்டவமாடி ஓய்ந்துக் கிடந்தன. மற்றும் சில பொருட்கள் எங்கோ ஓடிப்போய் மூலை முடுக்குகளுக்குள் முடங்கிக் கிடந்தன.

காமன் பள்ளித் தலைமை ஆசிரியர் வகுப்புக்குள்ளே நடந்த வாத்து உலாக்களைக் கண்டே குவாக் குவாக் என்று ஒலி எழுப்பியவர், இப்போது தனது வகுப்பறைப் புயலைப் பார்த்து ஆமையாகவா இருப்பார்?

பள்ளியில் அடித்த மாணவர்களது புயலில், குறுப்புக்தார மாணவனான ஆஸ்லாரையும் அடித்துச் சென்றது. அதாவது, கிராமர் பள்ளி மாணவர்களுடன் ஆஸ்லரும் வெளியேற்றப் பட்டார், பாவம்...! பதினைந்து வயது மாணவனான ஆஸ்லர் வெளியேற்றப் பட்ட செய்தி, காமன் பள்ளியையும், அதன் தலைமை ஆசிரியரையும் களிப்புக் கடலிலே மூழ்கடித்தது.

பெற்றோர்கள் மனக்கவலை!

பள்ளியிலே இருந்து மாணவர்கள் வெளியேற்றப் பட்டதைக் கேள்விப்பட பெற்றறோர்கள் மனவேதனை அடைந்தார்கள். ஆனால், அந்தப் பள்ளிகளில் அடித்தது புயற்காற்று அல்லவா?

அதனால் மாணவர்களது தாய்தந்தையர்களால் ஏதும் கூறிட வாய் திறக்க முடியவில்லை. என்றாலும், அவரவர் பிள்ளைகளைக் குற்றவாளிகள் என்று கூறிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை மாதா பிதா இயல்பும் இதுதானே!