பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கோயிலுக்குள் சிவலிங்கமொன்று இருக்கிறது. அதன் பெயர் மகாலிங்கம் அதனிரு புறத்திலும் பூதத்தார் சிலையும், சொரிமுத்தய்யர் சிலையும் உள்ளன. இச்சொரிமுத்தய்யரே குறவஞ்சியிலும், பல வில்லுப் பாட்டுக்களிலும் குறிப்பிடப்படுகிறார். அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழி 'வல்லவர் சொரி முத்தய்யர்' என்பன. இவற்றைக் காணும்போது பட்டவராயன் கதை பரவிய போதே சொரிமுத்தய்யர் கோவில் புகழ் பெற்றிருந்தது என்று கருதலாம். இக்கோவிலில் வணங்கப்படும் ஐயனார் மலையாளிகளும் தமிழர்களும் வணங்கும் தெய்வம். கோவில் தோன்றி சுமார் 400 ஆண்டுகள் இருக்கலாம். கதை நிகழ்ச்சிகள் 400 ஆண்டுகளுக்குப் பின்னரும், 300 ஆண்டுகளுக்கு முன்னரும் உள்ள காலத்தைக் குறிக்கின்றன. உண்மையா? கற்பனையா? காலத்தைக் குறித்த ஆராய்ச்சியில் 300 வருடங்களுக்கும் 400 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இக்கதையின் நிகழ்ச்சிகள் நடத்திருக்கலாமென்று கூறினோம். இக்கதை கற்பனைக் கதையா? உண்மையை அடிப்படையாகக் கொண்டதா? என்ற கேள்விக்கு விடை காண்போம். புராணக் கதைகளில் தெய்வீக சக்திகளால் நிகழும் நிகழ்ச்சிகள் பல வருகின்றன. மனித சக்திக்கு அப்பாற்பட்ட சில சக்திகளின் தலையீட்டால் கதை நிகழ்ச்சிகள் இயக்கப்படும் இராமாயணனத்தில் தேவர்கள் முறையீட்டால் அரக்கர்களை அழிக்கத் திருமால் இராமனாக அவதரித்தார். இராமனுடைய சக்தி தெய்வீக சக்தி. அதை எதிர்த்து நிற்க எந்தச் சக்தியாலும் இயலாது. வில்லுப்பாட்டுக்களிலும் இத்தகைய சக்திகள் செயல்படுவதாகக் காட்டும் கதைகள் உள்ளன. உதாரணமாக 'பழைகை நல்லூர் இசைக்கி' கதையில் காதலியைக் கொலை செய்த கோவில் பூசாரி செட்டியாகவும், கொலை செய்யப்பட்ட கோவில் முறைக்காரி (தாசி) சோழன் மகள் நீலியாகவும் தோன்றி, மறு ஜன்மத்தில் அவனை அவள் பழி வாங்குகிறாள் என்றும் கூறப்படுகிறது. இதுவும் 'விதி' என்னும் இயற்கை விதிகளுக்கு அதீதமான சக்தியின்