பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இரக்கமின்றிக் கொன்றுவிட்டார்கள். அவனது தலையை அறுத்துக் கொண்டுபோய் நட்டாத்தி ஜமீன்தாரிடம் காட்டினார்கள். அவர் தன் பொறுப்பைக் கைகழுவி விட்டார். "கோபத்தில் சொன்ன வார்த்தையைத் தந்தை இப்படிய நிறைவேற்றுவது?" என்று அவர் கேட்டார். இச்செய்தி கேட்டு சின்ன நாடானின் மனைவி தற்கொலை செய்துகொண்டாள். அவனது காதலியும் உயிரைப் போக்கிக் கொண்டாள். இதுபோலவே தடி விரையன் கதை, சிவனனைஞ்சு கதை என்ற பல கதைகள் இதே போன்ற கதைப்பொருள் கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. தங்கை வேற்றுச் சாதியானைக் காதலிப்பதை அறிந்து தமையன்மார் காதலனைக் கொன்றுவிடுவதும், காதலி உயிர் நீப்பதுமே இக்கதைகளின் பொருளாகும். இக்கதைகளில் பல உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டன. இக்கதைகளின் தலைவர்கள் யாவரினும் முத்துப்பட்டன் பெருஞ் சிறப்புடையவன். அவன் குலச்சிறப்புடையவன்; கல்வி நலமுடையவன். ஆளும் அரசனிடம் செல்வாக்குப் பெற்றவன். ஆனால் மேல்தட்டு வாழ்க்கையில் அவன் உள்ளம் நிறைவு பெறவில்லை. தாழ்வான குலத்தில் பிறந்து, உழைத்துப் பிழைக்கும் இள நங்கையரிடம் அவன் அழகையும்,இனிமையையும், மானிடப் பண்பையும் கண்டான். அவற்றையே போற்றினான். அவர்களோடு மன உறவு கொள்ள, வாலப்பகடையின் நிபந்தனைகள் அனைத்தையும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டான். அதன் மூலம் சாதிப் பெருமைக்கும் கல்விச் செறுக்குக்கும் சமாதி கட்டினான். மானிடப் பண்பின் சிகரமாக வளர்ச்சி பெற்றான். இது மட்டுமா? தனது மனைவியரது உறவினரைத் தனது உறவினராக்கிக் கொண்டான். அவர்களது துன்பங்களைத் தனது துன்பமாகக் கருதினான். அவர்களுடைய வாழ்க்கைக்கு வரும் இடையூறுகளைப் போக்கப் போராடினான். இப்போராட்டத்தில் உயிர் நீத்தான்.