பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு காப்பு அட்டதிக் குலகோர்க் கெல்லாம் அதிபதியான தீரன் சட்டமாய் பொதிகை வாழுஞ் சங்கர னளித்த மைந்தன் துட்டரையடக்குகின்ற சொரிமுத்து அய்யன் வாசல் பட்டன்மேல் வரவு பாட பால முக் கணன்காப்பாமே தாட்டுவிளம் நாடுநல்லோ நல்லநாடு நாவலர்கள் புகழும் நாடு கோடைமழை பொழியும்நாடு குளிர்ந்ததென்றல் வீசும்நாடு இஞ்சியிஞ்சி பூக்கும்நாடு இருவாச்சிம்லரும்நாடு வருக்கைப்பிலமரமும் வளர்ந்தோங்கி செழிக்கும்நாடு அத்திமுகன் குடியிருக்கும் ஆசிய நாடதிலே’ முத்துப்பட்டனின் கல்வி அறிவு ஆரிய நாடதிலே அழகுடைய பட்டன்மார்கள் அண்ணன்பட்டன் தம்பிபட்டன் அப்பாபட்டன் குப்பாட்ட்ன் சங்குபட்டன் சரவணபட்டன் தக்கசோம லிங்கப்பட்டன்’ எல்லாத்துக்கும் இளையவனாம் எத்தன் ஆரிய முத்துப்பட்டன் அஞ்கநல்ல வயதுதன்னில் அசலாத்து குழந்தையுடன் பள்ளிக்குத் தானிருந்து பலகணக்கும் தான்படித்து ஆனையேற்றம் குதிரையேற்றம் அளவிறந்த தொழில் படித்தான் மல்லடவு" சிலம்புத்தொழில் நோக்குவித்தை குறளிவித்தை வித்தையெல்லாம் தான்படித்து வேதாந்திபோ லிருக்கையிலே தமையன்களுடன் சண்டையிட்டு கொட்டாரகரை செல்லுதல் சத்தியவான் முத்துப்பட்டின் தமயன்மாரோடே சண்டை செய்து மனதாபிதா வெறுத்து வஸ்துவகை தானிழந்து பிறந்த ஊர்தனைக்கடிந்து பிறவூரில் போய்ச்சேர்ந்தான். இருந்து நினைத்தானே எண்ணமிட்டான் கோடிபுத்தி படித்ததொழில் செய்யவென்றால் பார்ப்பதற் கொருவரில்லை. அடுத்தஊரு ஆனதிலே அமர்ந்தாலும் சிறப்புமில்லை