பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 சேரனிடம் போனோமானால் சேவிக்கலாம் மிச்சமில்லை சோழனிடம் போனோமானால் சோறுண்டு கனையுமில்லை’ பாண்டியனிடம் போனோமானால் பழுதுவரு மென்றுசொல்லி கொட்டாரக் கரைதனிலே ராமராஜ னரண்மனையில் போகவேனு மென்றுசொல்லி புகழுடைய முத்துப்பட்டன் கொட்டாரக் கரையதிலே ராமராஜன் ஊரதிலே சட்டனவே தானடந்து சஞ்சலமாய் வீற்றிருந்தான் க்கப்பட்டனின் அற்றலைக் கொட்டாாக்காை மன்னன் காணல் خان للم ராஜனுமே வீற்றிருக்க நாட்டியங்கள் ஆடிவர அப்போது முத்துப்பட்டன் அவனுடைய தொழில்கான சமுத்திரத்தில் வாள்நிறுத்தி சக்கரம்போல் சுழன்றுவந்தான் கண்டானே அரசமன்னன் கட்டழகன் பட்டனைத்தான் ராஜாவோ மந்திரியோ நமக்குஇவன் மாற்றானோ வாடாநீ அறிக்கைக்காரா வார்த்தையொன்று சொல்லக்கேளாய் அக்ஷணமே அறிக்கைகாரா அவனையிங்கே அழைத்துவாடா மன்னன் முன் முத்துப்பட்டன் அப்போ தறியக்காரன் அவனையங்கே யழைத்துவந்தான் வந்தவுடன் ராஜமன்னன் வாய்திறந்தேது செல்வான் எந்தவூர் எந்ததேசம் எங்கிருந்து வந்தபிள் ை! என்று சொன்ன வேளையிலே ஏத்தரிய முத்துப்பட்டன் சொல்லுவானா மரசனிடஞ் சோதிமுத்து வாய்,கிறந்து ஆரிய நாடதிலே ஆறண்ணன் மாரோடோ சண்டையிட்டு யான்பாவி தனிவழியே வந்துவிட்டேன் என்னையொரு சேவகமாயிருத்திக்கொள்ள வேணுமையா மன்னனிடம் வேலைக்கு அமர்தல் என்றுசொன்ன வேளையிலே ஏற்றதொரு அரசமன்னன் பதினாறு வயதுப்பிள்ளை பல கணக்குப் படித்தாரென்று கைக்காயிரம் மெய்க்காயிரம் கால்க்காயிரம் வாள்க்காயிரம் நன்றாக சேவகன்தான் நமக்குஇவன் கிடைத்தானென்று நாலாயிரம் பொன்சம்பளம் நலமாகத் திட்டம்செய்து சேவகற்கு மனுவெழுதி திறமையுடனிருக்கையிலே