பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 மல்லர் உடலுரம் வேண்டும்-உயர்
மார்பும் அகன்றிடல் வேண்டும்-மிக
நல்லவர் என்றுல கேத்த-நிதம்
நன்மைகள் நாடிடல் வேண்டும். 6

சற்குணங் கள் பல பெற்றார்-வித்யா
சாகரர் என்னும் அக் கற்றார்-அவர்
பொற்குணம் யாவும் பெறுவோம்-புவி
போற்றும் புகழும் உறுவோம். 7

தோள்கள் பருத்திடல் வேண்டும்-உயர்
துாய்மைக் குணங்களும் வேண்டும்-பல
நாள்கள் கழித்திடல் நன்றோ?-நந்தம்
நாடு செழித்திடல் என்றோ? 8

அல்லும் பகலும் உழைத்தே-பச்சை
யப்பனைப் போலத் தழைத்தே-பல
நல்லறம் நாடிப் புரிவோம்-இந்த
நன்மதி யாவும் மறவோம். 9


44