பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





37. சிறுவர்களும் சிறுகுயிலும்

சிறுவர்: நீலச் சிறுகுயிலே!
நின்போல், மகிழ்வுடனே
பாலர் வாழ்ந்திடவே
பகர்வாய் நல்வழியே.
1
குயில்: அன்பாய்க் கேட்டிடுவீர்
அருமைச் சிறுவர்களே;
இன்போ டுரைத்திடுவேன்;
இனிதே செவிசாய்ப்பீர்:
2
ஆடை அணிகளினால்
ஆடம் பரம்வேண்டாம்;
தேடி உழைத்திடுவீர்
தேவை தமையறிந்தே.
3

45