பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







38. கரிகால் வளவன்


திங்கள் தோறும்
மும்மழை பொழியும்
திருமலி தமிழ்நாட்டில்
பொங்கும் மகிழ்வால்
பொற்புற ஆண்டனர்
புகழ்மலி மூவேந்தர் 1

சேரன் சோழன்
பாண்டியன் என்றே
செப்புவர் அவர்தம்மை
ஆரும் நிகரே
இலைஇலை எனவே
ஆண்டனர் அவனியினை 2

சோறும் நீரும்
மிகுந்திடு நாடாம்
சோழர்தம் நன்னாடு
பேறும் பெருமையும்
பெற்றிட ஆண்டவர்
பெருவளச் சோழியர்கள். 3


47