இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
39. கற்றது கைம்மண் அளவு
ஆதி நாளில் அவ்வை என்னும்
அரிய கிழவி இருந்தாள்;-அவள்
ஒதி ஓதி உலகில் உள்ள
உண்மை பலவும் தெரிந்தாள்.
1
கற்று வல்ல புலவர் பலரும்
கைகள் கூப்பித் தொழுவார்-‘இவள்
பெற்ற பேறு யாவர் பெறுவார்?’
என்று கூறிப் புகழ்வார்.
2
ஒருநாள் அவ்வை ஊர்கள் பலவும்
உழன்று வருந்தி இளைத்தே-வழி
வருவாள் அவளோர் வனத்தின் இடையே
வந்து மிகவும் களைத்தே.
3
51