பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







39. கற்றது கைம்மண் அளவு

ஆதி நாளில் அவ்வை என்னும்
     அரிய கிழவி இருந்தாள்;-அவள்
ஒதி ஓதி உலகில் உள்ள
     உண்மை பலவும் தெரிந்தாள். 1

கற்று வல்ல புலவர் பலரும்
     கைகள் கூப்பித் தொழுவார்-‘இவள்
பெற்ற பேறு யாவர் பெறுவார்?’
     என்று கூறிப் புகழ்வார். 2

ஒருநாள் அவ்வை ஊர்கள் பலவும்
     உழன்று வருந்தி இளைத்தே-வழி
வருவாள் அவளோர் வனத்தின் இடையே
     வந்து மிகவும் களைத்தே. 3

51