இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகமதிய நண்பனவன்
முகமலர்ச்சி கண்டான் ;
நகமுடனே சதையெனவே
நட்புரிமை கொண்டான்.
4
இருவரிவர் ஒற்றுமைக்கே
இணையில்லை கூற.
ஒருவரைவிட் டொருவர்பிரிந்
திருந்ததில்லை வேறே.
5
சாதிமத பேதமது
சாற்றியதும் இல்லை;
நீதிநெறி நியமமதில்
நீங்கியதும் இல்லை.
6
ஒன்றெனவே உணவருந்தும்
உயர்குணத்தில் நின்றார்;
சென்றிறைவன் அடிவணங்கும்
செய்கையிலும் வென்றார்.
7
குதிரைகளின் குறிப்புணரும்
கலைகள்மிகக் கற்றார்;
எதிரொருவர் இல்லையென
இயம்பிடவும் பெற்றார்.
8
2. தாயும் மைந்தனும்:
இங்ஙனம் இவர்கள் இன்புடன் நாளும்
இருந்து வருதலுமே
மங்கள மாய்ப்பதி னாறாம் வயதினை
மன்னன் அடைதலுமே.
1
55