| பாட்டி னியல்பு வைத்து, ஆன் நிரைகளை அடுத்துள்ள மலைச் சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல் மேயவிட்டுத், தாம் மரநிழ லிற் சாய்ந் திருந்துகொண்டு, தமக் கெதிரே பச்சிலைப் போர்வை மேற்கொண்டு கரிய முகில்கள் நெற்றி தழுவிக் கிடப்பப் பெருந்தன்மையொடு வான் அளாவித் தோன் றும் மலையினை அண்ணாந்துபார்த்தவாறாய் அவர்கள் அச சமும் மகிழ்ச்சியும் அடையும்போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும். காதலினாற் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகி ழாத காதலன்பின் மிகுதியால் தோளொடு தோள் பிணை யத் தழுவிக்கொண்டு, மலையடிவாரத்தில் உள்ள பூஞ் சோலைகளிற் களிப்பாய் உலவுந்தோறுந், தூங்கணங்குரு ளிகள் மரக்கிளைகளில் வியப்பான கூடுகட்டுதலையும் ; மாப பொந்துகளிலிருந்து மணிப்புறாக்கள் கூவுதலையும்; ஆண் மயில்கள் தம் அழகிய தோகையினை விரித்துப் பெடை மயில் கண்டு களிப்ப ஒருபுறம் ஆடுதலையும்; மலையிலிருந் தொழுகும் அருவிநீர் கூழாங் கற்படையின் மேற் சிலு சிலுவென்று ஓடிவந்து அச்சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆழ்ந்த குட்டத்தில் நிரம்பித்துளும்ப, அதன்கண்உள்ள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலைகளின்மேல் இதழ் களை விரித்து மிகச் சிவப்பாய் அலர்தலையும் விரும்பிக் கண்டு, நறுமணங் கமழும் பூக்களை மரங்களினின்று தாவிப் பறித்துக் கரிய கூந்தலில் மாறிமாறி அணிந்துஞ், சிவக்கப் பழுத்த கொவ்வைக் கனிபோன்ற தம் இதழ்கள் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டுந், தேன் ஒழுகினா லென் இனிய நேயமொழிகள் பேசிக்கொண்டும் அவர் கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறி தல் வேண்டும்.
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
