பாட்டினியல்பு கும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிதற்கு மிக விழைகின்றோம். இங்ஙனந் தோன்றும் அரிய பெரிய கருத்துக்களின் கோவை ஒழுங்கினையே டென்றும் அறிதல் வேண்டும். இன்னும், மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடை யிலே வறுநினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச்செல் லும்போது, உலக இயற்கை யென்னும் மலைக்குகைகளிலே அரித்து எடுத்துவந்த அருங்கருத்துக்களான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ் வோடையின் அடிநிலத் திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப்புலவன் என் னும் அரிப்புக்காரன் மிகவிழைந்து முயன்று அப்பொற் சிதர்களை யெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்ட மாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும். இன்னும், மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களொடுங் கலப் புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப் புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளியவடித்து அதன் இன்சுவை யினை மிகுதிப்படுத்தி,நாமெல்லாம் அதனை பருகிப் பெரிய தோர் ஆறுதலடையக் கொடுப்பன்; அங்ஙனங் கொடுக் கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கமும் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக் கருத்துப்பற்றியே மிலிட்டன் என்னும் ஆங்கிலமொழி வல்ல நல்லிசைப் புலவரும், "பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆம் என்று உரை கூறினார். இதுநிற்க.
- Areopagitica.