பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு என்னும் இனிப், பண்டைக் காலத்துச் செந்தமிழ்ப் புலவ ரெல்லாரும் உலக இயற்கைத்திறம் பிறழாமல், அதனை நுணுகி ஆராய்ந்து பாட்டுப்பாடும் மனவுறுதி மிகுதியு முடையராயிருந்தனர். உலக இயற்கையிற் கானப்படும் ஒளிவிளக்கத்தையும் எழிலையும் மிக வியந்தனர். தம்மன னுணர்விற்கு இசைந்த வண்ணமெல்லாம் உலக இயற்கை யினைத் திரித்துக் கூறாமல், அவ்வுலக இயற்கையின் அழ கின் வழியே தமதறிவினைப் பொருந்தவைத்துத் தம் நினை வினை விரிவுசெய்து விளக்கி மகிழ்ந்தனர். இம் முறை மை நற்பெரும் புலவர்க்கு இன்றியமையாச் சிறப்பின தாம் என்னுங் கருத்துப் பற்றியே இரசிகர் ஆங்கிலமொழி உரைவல்ல ஆசிரியர், காட்டு என்ற புல வரைப் பற்றிச் சொல்லவந்த விடத்து அவர் தமதுணர் ஞின் வழியே உலக இயற்கையினை நிறுத்திக்கொள்ளா மல், அவ் வுலக இயற்கையின் வழியே தமதுணர்வினை நிறுத்தி நின்றார்.'" என்று புகழ்ந்தெடுத்துக் கூறினார். ஆகவே, உலக இயற்கையின் வழிநின்று பாட்டுப் பாடு தலே அருமையா மென்பதும், அதுவே நல்லிசைப் புல வர்க்கு அடையாளமாம் என்பதும் இதனால் நன்குபெதப் படும். பழந்தமிழ்ப் புலவர்களெல்லாரும் இந்நுணுக்கம் இனிதறிந்து விளங்கினார்களென்பதற்குப் பழைய தமிழ்ப் பாட்டுகளே சான்றாகும்.எனினும், இதனை ஒரு பழைய செய்யுள் முகத்தானும் ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம்
- Ruskin: Modern Painters, Vol. III, p. 284.
2