பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓம் நான்காம் பதிப்பின் முகவுரை இற்றைக்கு இருபத்தெட்டாண்டுகளுக்குமுன் யாம் இம் முல்லைப்பாட் டாராய்ச்சி யுரையை எழுதிய காலத்துப், பழைய சங்கத்தமி ழிலக்கியங்களாகிய அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலாயின அச்சிட்டு வெ ளிப்படுத்தப்படவில்லை. அதனால் யாம் பயின்ற தொல் காப்பியவுரையிலிருந்தே இவ்வாராய்ச்சியுரைக்கு வேண் டிய மேற்கோட் செய்யுட்களை எடுத்துக்காட்ட லாயி னேம். அப்போது அம்மேற்கோள் உள்ள நூல்களைக் குறிப்பிடுதல் இயலா திருந்தது.மற்று, இந் நாளிலோ எட்டுத்தொகை நூல்கள் அவ்வளவும் வெளிவரும் பேறு கிடைத்திருத்தலின், யாம் இப்பதிப்பின்கண் ஒவ்வொரு மேற்கோளுக்கும் அவை வந்துள்ள நூல்களின் பெயர்க ளைக் குறித்திருக்கின்றேம். அதுவேயுமன்றி, முற்பதிப்புகளில் இல்லாத சில பகுதிகளும் விளக்கவுரைக் குறிப்புகளும் இப் பதிப்பின் கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இன்னும், இந்நூலின் உரைநடைச்சுவையை முன் னையிலும் மிகுதிப்படுத்தல் வேண்டிப், பலப்பல சொற் றிருத்தங்கள் சொற்றொடர்த் திருத்தங்களும் ஆங்காங் குச் செய்திருக்கின்றேம். இவையல்லாமலும், முற்பதிப்புகளில் இடையிடை யே விரவியிருந்த சிற்சில வடசொற்களையுங் களைந்தெடுத்