பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு கரு காலமும், அவர் பிறந்த பின்நூற்றாண்டிலே அவ்வாறு விளங்கிய புலவர் காலமுஞ் செந்தமிழ்மொழி மிக உயர்ந்த நிலையிலே இருந்து திகழ்ந்த காலமாகு மென்று அறிதல்வேண்டும். திருவள்ளுவர் பிறப்பதற்குமுன் ஒரு நானூறு ஆண்டும், அவர்பிறந்தபின் ஒரு நூறு ஆண்டும் சேர்ந்து முடிந்த ஓர் ஐந்நூறாண்டுந் தமிழ்மொழி மறு வற்ற மதிபோற் கலைநிரம்பி விளங்கிய காலமாகும். இக் காலத்திலே சிறந்த புலவர் பலர்தோன்றிப் பலவகையான அரியபெரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினார். இப்புலவர் களைப் போற்றித் தமிழை வளம்படுத்தற்கு ஆவல்மிக்க அரசர்பலரும் வள்ளல்பலரும் ஆங்காங்கு மிக்கிருந்த னர். தமிழ அரசர்கள் பலர் கல்வி வளத்தாலுஞ் செல்வ வளத்தாலும் மேம்பட்டுப், போர்வல்லமையிலும் பெரு மையடைந்து, தமிழ் மொழியினைப் பல விடங்களிலும் பெருகச்செய்வதிற் கருத்தூன்றினராய் இருந்தார். இக்காலத்திலேதான் தனக்கு ஒப்பும் உயர்வும் இன்றி விளங்காநிற்குத் திருக்குறன் என்னும் அரும் பெருநூல் எழுதப்பட்டது; சிலப்பதிகாரம், மணிமே கலை முதலான சிறந்த தமிழ்க் காப்பியங்களும், பழ மொழி, நான்மணிக்கடிகை முதலான அறநூல்களுக்கு தோற்றமுற்று எழுந்தன. இல் வைந்நூறாண்டுகளுக்கு முன்னும்பின்னு மிருந்த தமிழ்ப்புலவர்களாற் பாடப்பட் டுச் சிதறிக்கிடந்த அருந்தமிழ்ப் பாட்டுக்கதொல்லாம் ஒருங்கு தொகுக்கப்பட்டு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை முதலிய வகைவகைத் தொகை நூல்க வாக இக் காலத்திலேதான் ஒழுங்குபடுத்தப்பட்டன. பண்டைக்காலத்திலே செய்யப்பட்ட தொல்காப்பியம் என்னும் அரிய பெரிய தமிழிலக்கணத்தில் மிகச் சிறந்த
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
