பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கர்களுஞ் செய்த வேண்டுகோட் கிணங்கி அவர்தாமும் ஒருங்குசேர்ந்து முன்னர்த்தந்த பொருள்கொண்டு அஃ திரண்டாம் முறையும் பதிப்பிடப்பட்டது. இரண்டாம் பதிப்புப் புத்தகங்களுஞ் செலவாய் விட்டமையால், இப் போதிதனை மீண்டும் பதிக்கலாயினேம். இப்பதிப்பின் கட் பலத்திருத்தஙகளும் பல மாறுதல்களுஞ் செய்யப்பட் டிருக்கின்றன. எமதிடமுள்ள ஓர் ஏட்டுச் சுவடியையும் அச்சுப் புத்தகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து முல்லைப் பாட்டுச் செய்யுளின் கண்ணுஞ் சில திருத்தங்கள் செய் யப்பட்டிருக்கின்றன. முல்லைப்பாட்டுப்பயில்வோர் பிறநூல்உதவி பெரிதும் வேண்டாமல் எளிதில் அதனைக் கற்றறிதற் பொருட்டு, முன்னிரண்டு பதிப்புக்களிலும் இல்லாத பல விளக்க உரைக்குறிப்புகள் இப்போதிதன்கட் புதியவாய்ச் சேர்க் கப்பட்டிருக்கின்றன.அதுவேயுமன்றி, உலக வழக்கத்தி லுள்ள சொற்களைத் தவிர்த்து முல்லைப்பாட்டில் வந்த ஏனை எல்லாச்சொற்களையும் அகரவரிசைப் படுத்தி அவற் றிற்கெல்லாம் பொருள்கள் எழுதி யிருக்கின்றேம். இவ் வருஞ்சொற் பொருள் வரிசையின் உதவிகொண்டு இச் செய்யுட்பொருள் உணர்ந்து கொள்வது எவர்க்கும் எளி தேயாம். இனி, இவ்வருஞ் சொற்கட்குப் பொருள் வரையுங்கால் இம்முல்லைப்பாட்டு வழங்கிய காலத்தில் அதன்கண்வந்த சொற்கட்கு வழங்கிய பொருள்களையும், அக்காலத்தை அடுத்துத் தோன்றிய சான்றோர் நூல்க ளில் அவற்றிற்கு வழங்கிய பொருள்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றேம். ஒரு செய்யுள் வழங்கிய காலத் தும் அதனையடுத்துவந்த காலத்தும் அச்செய்யுட் சொற் கட்குப் பொருடெளிவது அச்செய்யுள் ஆக்கியோன்