பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 கருத்தை நன்கறிந்து கோடற்குக் கருவியாமாதலின். இங்ஙனஞ் சொற்பொரு டுணிவிக்கும் முறையைத் தமி மாராய்வோர் அனைவருங் கைப்பற்றி ஒழுகுவராயின் நமதருமைச் செந்தமிழ்மொழி சாலவும் விளக்கம் உடை பதாகித்திகழும். இனி, இவ்வாராய்ச்சி யுரையின்கண் மற்றொரு முதன்மையான சீர் திருத்தமுஞ் செய்திருக்கின்றேம். தொன்றுதொட்ட சிறப்பும, இலக்கண இலக்கிய வரம் ந், தனக்கெனப் பன்னூறாயிரஞ் சொற்களும் வாய்ந்து, இன்றுகாறும் வழக்கு வீழாது உயிரோடு உலாவிப் பன் னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டுவரும் நமது இனிய செந்தமிழ்மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம் பெறச் செய்வது தமிழராயினார். ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம் சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாது தமக்கெனச் சிலசொற்களே யுடைய மொழிகளையும், உலகவழக்கிற் குச் சிறிதும் பயன்படாமல் இறந்துபட்ட மொழிகளை யும் அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார்போற் நம் மை எண்ணிக்கொள்வாரும் அவற்றைத் தூயவாய் வழங் கவும் அவற்றை உயிர்ப்பிக்கவும் ஓவாது முபன்றுவர, எல்லா நலங்களும் ஒருங்குடைய நமதருமைச் செந்தமிழ் மொழியை நம்மனோர் பயிலாதும் பாதுகாவாதுங் கை விட்டிருத்தல் நிரம்பவும் இரங்கற்பாலதொன்றாம். இனி யேனும் அவர் அங்ஙனம் மடிந்திராமைப் பொருட்டு, நம்மனோரிற் கற்றவராயிருப்போர் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமற் றனித்தமி ழிற் பேசவும் எழுதவுங் கடைப்பிடியாய்ப் பழகிவால்