பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

39

“என்ன கஷ்டம்! இப்படித்தான் சில பொம்பிளைங்க, இரண்டாம்தாரம்னு வந்ததும் பேயாப் போயிடுதுங்க ஏம்மா! இப்ப, உங்க அக்கா, மாமன் சம்மதிச்சித்தான் தம்பியைக் கட்டிட்டியா?”

மைத்ரேயி தலையைக் குனிந்துகொண்டு விரலால் கோலமிடுகிறாள்

“எனக்கு இருந்த ஒரே உறவை அத்திட்டுத்தான் வந்திருக்கிறேன்-”

மளமளவென்று பல துளிகள் வீழ்கின்றன.

“அவங்க சம்மதிக்கலே. பின்ன கலியாணத்தை ஆருதான் நடத்தி வச்சாங்க?”

“யாருமே நடத்தலே. இந்த மணிமாலை மகாபலிபுரத்தில் வாங்கினது.”

“தேவலாமே? கோயிலில்லாத மகாபலிபுரத்துக் கல்லுங்களுக்கு முன்ன மணிமாலையைப் போட்டுக் கல்யாணம் நீங்களே நடத்திட்டீங்களாக்கும்” என்று அவள் சிரிக்கிறாள்.

காப்பி குடித்த பிறகு அவள் அடுத்தாற் போல் ஒட்டி இருக்கும் இன்னொரு அறைக்கு அழைத்துச் செல்கிறாள். அந்த அறையின் ஓர் புறம் மாடிக்குச் செல்லப் படி இருக்கிறது. அங்கும் சுவரில் படங்கள் இருக்கின்றன. கண்ண பிரானின் இளம் பருவத் தோற்றங்கள். மனைவி, குழந்தை களுடன் ஒரு படம். அதே குழந்தை, சிறுவனாக பத்து, பதினைந்து வயசுத் தோற்றங்களில் சில படங்கள், உருத்திராட்சமும் திருநீருமணிந்த சுவாமிகள் ஒரு படத்தில் வீற்றிருக்கிறார். அலமாரியில் அந்தப் படத்தினடியில் சாம்பிராணி வத்தி வைக்கும் இரண்டு யானைப் பொம்மைகளும் ஒரு ஜோதி விளக்கும் இருக்கின்றன. இன்னொரு திறந்த ஷெல்ஃப் முழுவதும் கத்தையாகப் பழுப்பேறிய பத்திரிகைத்தாள் அடுக்குகள். மலிவுப் பிரசுரங்களாகத் தோன்றும் சிறு புத்தகங்கள்.

“அவங்க, உங்க தம்பிங்களா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/41&oldid=1101045" இலிருந்து மீள்விக்கப்பட்டது