பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ரோஜா இதழ்கள்


ரயில் சார்சு பஸ்சார்செல்லாம் நான் தரேன். குழியிலே இடறி விழுந்திட்டேன்னாலும் இத்தோட எந்திரிச்சு ஒழுங் காப் போய் சேந்துக்க.”

படுகுழியில் விழுந்துவிட்ட திகில் இப்போதுதான் அவளைக் கவ்விக்கொள்கிறது. கண்களில் கரகரவென்று நீர் மல்கி வழிகிறது.

“...எங்க வீட்ல அக்கா சேத்துக்க மாட்டாங்களே—நீங்க அவுங்களைப் பத்திச் சொல்றது நிசந்தாங்களா?”

“நெசமாவா? சரிதாம் போ. நீங்க நல்லபடியாருக்கிறதில் எனக்கு என்னம்மா? இப்ப நீ ஒரு பொண்ணு. நானொரு பொண்ணு. அதனால சொல்கிறேன். ஒரு பொண்ணாப் பிறந்து இப்படிச் சொல்லுறவங்க, வழி காட்டுறவங்க இல்லாம ஆயிட்டமே நாம, அதுபோல யாரும் ஆகக்கூடா துண்ண—”

அம்மணியம்மா முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கிறாள். “என்னைப்பத்தி நான் நினைக்கவே கேவலமாப் போயிட்டது. அப்படியாக்கிட்டானுவ. உன்னை இந்தக் கும்பல்ல கலியாணம்னு அவங்க சொல்றாப்பல, அதாவது அப்பன் தாயி பார்த்துக் கட்டியிருந்தா, நீ தாய்வீட்டிலோ, எங்கியோ பொழச்சிட்டு, இவனால வர்றபிள்ளை குட்டிங் களைப் பார்த்திட்டு, சமயத்தில மூக்குத் திருகாணியக் கேட் டாலும் குடுத்துத் தலைவருக்கு அவுங்க பிரியாணி வாங்க ஒபசாரம் செய்யற அளவுக்கு உரிமையும் கொண்டாடுவாங்க. இப்ப அப்படில்ல; ஒசந்த சாதின்னு ஒண்ணு இல்லாம இல்ல. அது ஈனத்துக்கு ஆசைப்பட்டுச் சந்தோசம் கொண்டாடாது. நீ உசந்த சாதியிலே பிறந்து இருக்கியேன்னு சொல்றேன், போயிடு”—

மைத்ரேயி தேம்பித் தேம்பி அழுகிறாள். அவளுடைய மனக் கோட்டைகள் ஒருபோதும் உறுதியாக நிலைத்திருக்க வில்லை. எனினும் இப்போது தரைமட்டமாகிவிட்டது. பழுத்துக் காய்ந்த சருகுகளை, ஓவென்றடிக்கும் காற்று நான்கு திசைகளிலும் வாரிச் சிதறுகின்றது. அவள் களங்கத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/56&oldid=1099760" இலிருந்து மீள்விக்கப்பட்டது