பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

55


சுமந்து கொண்டு, இடிபாடுகளிடையே, மொட்டை மரங்களி டையே நிற்கிறாள்.

“எங்க வீட்ல என்னைச் சேத்துக்கவே மாட்டாங்களே?” என்றழுகிறாள்.

ஏன் மாட்டாங்க? அவங்க உனக்கு உடம்புறப்புத் தானே? ஒருநா, ரெண்டுநா, மூணுநா, வாசல்ல பட்டினி கிடக்கலாம். குடி முழுகிப் போயிடாது. ஒட்டிக்கிடலாம். திரும்பிப் போயிடு—”

“அவ்வளவு மோசமா அவரு? என்னால அவரைத் திருத்த முடியாதுங்களா?”

அம்மணியம்மாளுக்கு எரிச்சல் வருகிறது.

“நீ இன்னும் புரிஞ்சுக்கல்ல? அவனையும் இன்னெருத் தனையும் நீ திருத்து முன்ன அவங்க உன்னைத் திருத்திடு வாங்க. ஈனக் கும்பல், இங்க ஒரு ராத்திரி நீ தங்கறதைக்கூட நான் ஒப்பமாட்டேன். நாதியில்ல, காப்பு இல்ல. இது இளகும் பிராயம், நெறிகெட்ட பதர்களாயிடுவாங்க. இவனுகளுக்கு அதே கண்ணு, தொழிலு—”

“ஐயோ—”

“அதான் சொல்றேன். மரியாதையாய் போயிடு. சட்டி பானை கழுவிச் சோறு தின்னலாம். பட்டுபவிசெல்லாம் வேணாம். அவன் உண்மையில் ஒழுக்கமா உன்னை வச்சிக் காப்பாத்தறது முக்கியம்னா, உன்னை இங்கே கொண்டாந்து வுடமாட்டான். நேரே, சேலத்தில் அப்பன் ஆயிகிட்டக் கூட்டிப் போயிவிட்டிருப்பான். பட்டினி பரதேசியானாலும் மானத்துக்குக் காப்பிருக்கிற இடத்திலே பொண் சாதிங்கறவ இருக்கணும்னு நினைச்சிருப்பான். நான் சொல்லுவது உனக்கு இப்ப புரியாம இருக்கலாம். பின்ன நீயே ஒரு நாள் நினைச்சிப்பே. பெரியவங்க பாத்து முடிக்காட்டியும், மண வடையில் மஞ்சப் புள்ளையாரைப் பூசை பண்ணி, ஆதியாத் தாய் தகப்பனைக் கும்பிட்டு, நல்லபடியா ஒருத்தனும் ஒருத்தியும் கூடி வாழணும்னிருக்கிற சடங்கெல்லாம் துண் அனுட்டு ஒட்டல் ரூம்பிலோ, எங்கியோ வச்சி ஒரு பொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/57&oldid=1099771" இலிருந்து மீள்விக்கப்பட்டது