பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதவியினை மறுபடியும் ஏற்றுப் பணிபுரிந்தார்; முன்னாலும், பின்னாலும், முப்புறத்தும், எப்புறத்தும் மின்னிச் சுடர்விடுக்கும் எண்ணற்ற விளக்கொளிகள்!- திகைப்பூட்டும் விதத்தினிலே திடுமென்று தாக்கிவந்த வகையினுக்குப் பதிலாக, இனிமேல், வரையறுத்துத் திட்டமிட்ட முற்றுகையே தினந்தோறும் இடம் பெறுமரல்! தெட்டத் தெளிவோடும், தீர்மான புத்தியொடும், முதன்முதலில் பின்வாங்கி வந்திடவும் முனைந்திட்டோம்; இதனாலே எவரேனும் இழிவுபட நேர்ந்ததுவோ? அத்தகையோர் யாரேனும் இருப்பின், அவரெல்லாம் சத்தமின்றி வெளியே றித் தம்வழியே செல்லட்டும்! இத்தோடு பின்வாங்கல் நின்றுவிடும்; இனிமேலே வைத்தகுறி தப்பாமல் முன்னே றிச் சென்றிடுவோம். ஆர்.சி.பி.50 ஊழியர்காள்! அடலேறு போல் நிமிர்ந்து வாருங்கள்! கப்பலினை வழிநடத்திச் செல்லுங்கள்! எத்தனையோ நூற்றாண்டுக் காலம்வரை பொதுவுடைமை