பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்குருதி நிறத்துகிலில் ஜிகினாப்பூ வேலையினால் இங்கெழுதி வைத்துள்ள கோஷங்கள் யாவினையும் சிந்தித்தும், வார்த்தைகளாய்த் திரட்டி உருக்கொடுத்தும் தந்ததுவும் தகைசான்ற தலைவர் லெனினன்றோ ? இங்குள்ள கோபுரங்கள் எல்லாம் லெனினவர்தம் சிங்கக் குரலதனைக் கேட்டுச் சிலிர்த்ததன்றோ? அன்வர்தம் குரல் கேட்டோர் அவர்தம்மைப் பின்பற்றிச் செந்நெருப்புத் தழலூடும் வழிகடந்து செல்லாரோ? இங்குள்7 தொழிலாளர் எல்லோரும் லெனின் அவரை நன்கறிய மாட்டாரோ? தங்களது நல்லிதயம் தம் மையெலாம் அவர்தமது சவப்பெட்டி மீதினிலே செம்மலரின் குலம்போலே சிந்திவிட மாட்டாரோ? உழைப்பாளர் பங்களாதம் உரிமைப்போர்த் தளபதியாய் வழிகாட்டிச் சென்றதுவும், வயிரம்போல், உருக்கைப்போல் தொழிலாளர் தம் குலத்தைத் துணிவு பெறச் செய்தவரை 124