பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலகலத்து நீர் சொரிந்து கழுவியதோர் சவப்பெட்டி. சவப்பெட்டி, அதனருகில் கரம்பக்கம் சார்ந் துற்போர் எவாெ னிலோ--- அவரெல்லாம் இவ்வுலக மக்களர்தம் பிரதிநிதிப் பெருங்கூட்டம்! பேருலகில் யாம் கண்ட பெரும் புயலை,. புரட்சியினை, பிர காயத்தைப் பெரிதாக்கி அரும்பணி யை முழுமையுற . ஆற்றி, நிறைவேற்றி வருங்கால வாழ்வதனை வளமாக்க நிற்கின்றோம். ஆனாலும் -- வணங்கிநின்ற செங்கொடியின் அணிவரிசை தானிருந்த இடத்திருந்து, தளபதியார் முரலோவின் (3 ) “'முன்னேறிச் செல்க! என முழத்தமிடும் ஆணையது இந்நேரம் தொலைகிருந்து எங்களுக்குக் கேட்கிறது. ஆனாலும், இவ்வாறு ஆணையிடல் அவசியமோ? தானாக தங்களெல்லாம் நெடுமுடிச்சு தானெடுத்து பளுவாகி விட்ட உடற் பாதத்தைச் சிரமமொடு இழுத்து, வசமாக்கி, இரும்புக் கனம்காக்கும் 136