பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகருக்குள் பின் வந்து நிலையம் தனிலிருந்தோர் கவசக்கார் முன்னேறிக் கணகணத்து வந்ததுகாண். சிவ சிவென்று மறுபடியும் சினந்த பெருங்காற்று சூறையெனப் புரட்சியினைச் சுழன்றடிக்கச் செய்தது காண்; வீறுகொண்ட போர்வீரர் - வித்தீனி 11 வீதியெல்லாம் திரண்டெழுந்து, மேதை லெனின் திரும்பிவிட்டார்! என முழங்கிக் கரம்தட்டி ஆர்ப்பரித்தார்! வீரரவர் மத்தியிலே வழிகாட்டும் தம்கரத்தை நேருறவே: நீட்டி,லெனின் இவ்வாறு நேர்ந்துரைத்தார்; தோழர்களே! பழசாகித் தொய்ந்து தொள தொளத்துப் பாழ்பட்ட சமூகஜன நாயகத்தின் அணிகளை நாம் களைந்தெ ரிவோம்! முதலாளிக் கயவர்களை, அவர்தம்முன் குழைந்து சலாம் போடும் கோடாலிக் காம்புகளைப் புழுதியிலே போக்கிடுவோம்! பூவுலகம் முழுதுமுள்ள உழுபவர்தம், உழைப்பவர்தம் உள்ளத்தின் குரலாய்நாம்