பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துப்பாக்கி, வெடிகுண்டைத் தொட்ட றியா, சுட்டறியா அப்பாவி யாரேனும் அவர்களிடை இருக்க வில்லை. உன்னைத்தான் ஸ்டாலின் உனை உடனே வரச்சொன்னார்! என்னுமொரு குரல் கேட்கும். இதுதான் உத்தரவு: தலைமைத் தபாலாபீஸ் தான நோக்கி உடன டியாய் அலைபோலும் கவசக்கார் அணிதிரண்டு சென்றிடுக! தோழர் ட்ராட்ஸ்கியவர் : 15 சொல்லிவிட்ட செய்தியிதைக் கேள்! என்றோர் குரல் கேட்கும்; கேட்டவனும் மறுகணமே சரி! யென்று கிளம்பிடுவாள்; அம்மனிதன் சட்டையிலே

  • அரோரா 37 கப்பல் அதன்

அடையாளம் பொறித்திருக்கும். சேதிகளைக் கொண்டு சிலர் தலைதெறிக்கச் சென்றிடுவார்; வீதிகளில் நின்று சிலர் விவாதித்துக் கொண்டிருப்பார்; துப்பாக்கிக் கு திரைகளைச் சொடுக்கிநிற்பார் வேறு சிலர்; எப்பாலும் அவரவர்தம் சுடமையினை ஏற்றிருப்பார், அப்போது லெனினவர்தாம் அழுத்தல், படாடோபம், 39!