பக்கம்:வசந்த மல்லிகா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திரசபா

99

"அப்பா! தொலைந்தான்! மல்லிகா! வா போகலாம். என்ன உன்னுடைய முகம் ஒருவிதமாக மாறுபட்டு விட்டதே?” என்றாள் கிருஷ்ணவேணி.

"என் முகம் மாறியா இருக்கிறது?" என்றாள் மல்லிகா.

"ஆம்; முற்றிலும் மாறிவிட்டது. இவனை இதற்கு முன் உனக்குத் தெரியுமா?" என்றாள் கிருஷ்ணவேணி.

"இவனை நேற்றுதான் பார்த்தேன். எனக்கு இவனைத் தெரியாது. இவனைக் கண்டவுடன் நேற்றைய விஷயங்கள் நினைவுக்கு வந்தன; வேறொன்றுமில்லை" என்று சொல்ல, இருவரும் சம்பாவித்துக்கொண்டே தமது ஜாகையை நோக்கி நடந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/117&oldid=1231940" இலிருந்து மீள்விக்கப்பட்டது