பக்கம்:வசந்த மல்லிகா.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதிப்புரை

சுதேசமித்திரன் 1-6-26ம் தேதியில் எழுதுகிறது:-

மாயா விநோதப் பரதேசி

[ஸ்ரீமான் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதியது]

ஸ்ரீமான் வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரைத் தமிழ் உலகம் நன்கறியும்; அவர் ஏற்கெனவே எழுதிய பல அரிய நாவல்கள் தமிழ் நாட்டினரைப் பரவசப்படுத்தி இருக்கின்றன என்பதில் ஐயமில்லை . எனினும் : மாயா விநோதப் பரதேசி என்னும் நாவலானது, மேனாடுகளில் பலரும் நம் நாட்டிற் சிலரும் சாசுவதமான நன்மையை விளைவிப்பதில் நாட்டமின்றி, தங்களு டைய நாவல் விலையாகிப் பணம் கைக்கு வரவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் உசிதாவுசிதம், யுக்தாயுக்தம் முதலியவை களைக் கவனியாது படிக்கும் போது மட்டில் ஒருவித இன்பத்தை விளைவிக்கக்கூடியதாகவும், சில சமயங்களில் தீயவழிகளிலும் பிரவர்த்தித்துவிடப் படிப்போரைத் தூண்டிவிடக் கூடிய வழியிலும் எழுதியிருப்பதைப்போல் இல்லாது நமது நூலாசிரியர் தற்காலம் நமது சமூகத்தில் இருந்துவரும் குறைகளை உணர்ந்து அவைகளைப் பரிகரிக்கும் நோக்கத்துடன் படிப்பவருடைய மனதில் நல்வழியான வாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டுமென்ற ஆவல் சுலபமாய் உதிக்கக்கூடிய விதமாக எளிய நடையிலும் மனதை உருக்கக்கூடிய விதமாகவும் நாவல்களை எழுதி வருவதற்குத் தமிழ் மக்கள் என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள். நம் முன்னிருக்கும் இந்த நாவலில் மனித வாழ்வில் சுகதுக்கங்கள் மாறி மாறி வருவது இயல்பு என்பதையும், "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்பதையும், "கெடுவான் கேடு நினைப்பான்" என்பதையும், மேனாட்டுக் கல்வி முறையினாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/280&oldid=1234422" இலிருந்து மீள்விக்கப்பட்டது