பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. § 爵 வடவேங்கடமும் திருவேங்கடமும் உடுக்கும் உடைக்கும் உணவுக்கு மேயுழல்வீர்! இனநீர் எடுக்கும் முடைக்கு ரம்பைக் கென்செய்வீர்? இழிமும்மதமும் மிடுக்கும் உடைக்குஞ்சரம் தொட்டவேங் க.வேற்.ர் அண்ட அடுக்கும் உடைக்கும் அவரடி காண்மின் அனைவருமே (35) (உழல்வீர்-அலைகின்றவர்களே, மு. ைட க் கு ரம்பை-நாற்ற உடம்பு; இழி-ஒழுகுகின்றி மீடுக்கு-வலிமை; குஞ்சரம்-யான்ை; அண்ட அடுக்கு-அண்டகோளங்களின் வரிசைகள்) மூன்று வகை மதநீர்களையும் மிடுக்கையுமுடைய கசேந்திர அபயம் அளித்தவரும், சங்ககாலத்தில் அண்டகோளவரிசை களையெல்லாம் அழிக்க வல்லவருமான வேங்கடவெற்ப ரின் திருவடிகளை தரிசித்தால் முக்தி பெறுவது உறுதி என் கின்றார். பிறிதொரு பாடலில் (94) திருவேங்கடமுடை யானைத் துதிக்க வல்லார்க்கு எவ்விதத் துன்பங்களும் உள வாகா என்று கூறுவர். திருவேங்கடமுடையானை வணங் கியவர்கள் அடையும் பயன்களை நிரல்படப் பேசும் அய் யங்கார், ஏறுக டாவுவர்; அன்னங்க டாவுவர்: ஈரிருகோட(டு) ஊறுக டாம்மழை ஓங்கல் கடாவுவர் (68) (ஏறு-ஆாளை: ஈர் இருகோடு-நான்கு தந்தங்கள்: கடாம் - மத நீர்; ஓங்கல் - மலைபோன்ற ஐராவதம் ! என்று உருத்திர பதவி, பிரம்ம பதவி, இந்திர பதவிகள் பெறலாம் என்கின்றார். திருவேங்கடமுடையானின் திரு நாமங்கள் என்னென்ன தரும் என்பதனை,